கேரட், பீன்ஸ், கோஸ் என உங்களுக்குப் பிடித்த எந்த காய்கறியை வைத்து வேண்டுமானாலும் இட்லி செய்யலாம்.
தேவையானவை
இட்லி மாவு - 1/2 கிலோ பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப் தேங்காய் துருவல் -அரை கப் வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப் மல்லித்தழை உப்பு
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள்டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்யும் முறை தாளிக்கும் கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவும். பருப்பு நன்கு பொன்னிறமானதும் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள்.
இந்தக் கலவையை அப்படியே சூடாக இல்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான காய்கறி இட்லி தயார்.
இதனை இட்லி தட்டுக்களில் அல்லாமல், டம்ளர், கிண்ணங்களில் ஊற்றி எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள்.
|