இனிப்பு சுவை அதிகமாக விரும்பு உண்ணுபவர்களுக்காகவேத் தயாரிக்கப்பட்டது இந்த இனிப்பு இட்லி. உடலுக்கும் ஏற்றது.
செய்யத் தேவையானவை
புழுங்கலரிசி - 2 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் தூளாக்கிய கருப்பட்டி - ஒரு கப் ஏலக்காய்தூள் தேங்காய் துருவல் நெய் ஆப்பசோடா
செய்யும் முறை
அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நன்றாகவும் அரைத்து, சிறிது உப்பு சேர்த்துப் புளிக்க வையுங்கள். மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும்.
நன்கு புளித்த மாவில் துருவிய தேங்காய், பொடி செய்த ஏலக்காய் தூள், சிறிது ஆப்பசோடா சேர்த்து நன்கு கலக்குங்கள்.
கருப்பட்டியை அரை டம்ளர் தண்ணீர் வைத்து அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். கருப்பட்டி நன்கு கரைந்ததும் அதைன வடிகட்டி சூடாக மாவில் சேருங்கள். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
மாவை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுங்கள். மிகவும் சுவையான இனிப்பு இட்லி தயார்.
கருப்பட்டி உடலுக்கும் ஏற்றது.
|