வெப்துனியா சமையல் பக்கத்தில் வாசகர்கள் தெரிவித்த சமையலை குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வீட்டில் நெய் காய்ச்சும் போது அதனோடு முருங்கை இலை சேர்த்து காய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் நெய் நல்ல மணமாக இருக்கும்
- இந்திரா - திருவண்ணாமலை மாவட்டம்
தோசை மாவு புலித்து விட்டால் அதில் 2 கை பிடி அளவு ரவையை சேர்த்து கலக்கி 10 நிமிடம் வைக்கவும். பின்னர் தோசை வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் புலிப்பு இருக்காது.
-பிரியா
பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது பால் அல்லது முட்டை சேர்த்து பிசைந்தால் மெதுவாக இருக்கும்.
-குணவதி
தோசை மாவு புலித்து விட்டால் சிறிது பால் சேர்த்து தோசை வார்த்தல் தோசை நன்றாக வரும். புலிக்காது
- சாயி பிரசன்னா
தோசை மாவு புளிக்காமல் இருக்க இட்லி ஊற்றியவுடன் நீளமான பச்சைமிளகாயை கீறி மாவில் போட்டு வைத்தால் மறுநாள் புளிக்காது.
- டி. குணவதி சோமு
உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கூறுங்கள்.
|