தேவையான பொருட்கள் :
அவல் 250 கிராம் நல்லெண்ணெய் 100 கிராம் புளி எலுமிச்சம்பழ அளவு மிளகாய் வற்றல் 3 கடுகு 1 டீஸ்பூன் ( தாளிக்க ) கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் ( தாளிக்க ) உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் ( தாளிக்க ) பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ) இஞ்சி ஒரு சிறிய துண்டு ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ) கறிவேப்பிலை கொஞ்சம் மஞ்சள் பொடி 2 சிட்டிகை பெருங்காயம் கொஞ்சம் உப்பு தேவைக்கேற்ப
செþய்முறைþ þ:
அவலை நன்றாக சுத்தம் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறப் போட்டு, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். தாளிப்பு வந்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் போட்டுக் கிளறி கரைத்தப் புளி தண்ணீரையும், மஞ்சள் பொடி, உப்பையும் தாளிப்பில் சேர்த்து கொதிக்கவிடவும். பெருங்காயத்தையும் போடவும்.
சுமார் 3 நிமிடம் வரை புளித்தண்ணீர் கொதித்தும், பிழிந்து வைத்திருக்கும் அவலை தாளிப்பில் கொட்டிக் கிளறவும்.
சிறிய தீயில் கிளறி மேல் சுண்டியவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.
|