மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளில் ஒன்று திசைகள். இதில் அன்றாட நாட்டு நடப்புகளை அலசும் விதமாகவும், மக்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாகவும் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.
திசைகள் நிகழ்ச்சியில் தடுப்பூசி, கடுதாசி, பொய்திகள், சல்லடை, விடாது கருப்பு, ஒலி பெருக்கி என 7 பிரிவுகளில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிரச்னைகள் அலசப்படுகிறது. உதாரணமாக கடுதாசி பகுதியில் நாட்டு நடப்புகள் குறித்து பாமரன் ஒருவன் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போன்ற பகுதிகள் இடம் பெறுகிறது.
அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் புதிய பரிணாமத்தில் சொல்லும் இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. |