நீலமலை என்றும், மலைகளின் அரசி என்றும் புகழப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகக் - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அழகிய மற்றொரு வனப்பகுதியே வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
ஊட்டியில் இருந்து பார்சன் வேலி என்று அழைக்கப்படும் தமிழக மின்வாரியம் அமைத்துள்ள நீர் மின் நிலையத்திற்காக கட்டப்பட்டுள்ள பார்சன் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து முக்குறுத்தி காட்டுப் பகுதிக்குள் செல்லும் பாதையில் (வனத்துறையினரின் சிறப்பு அனுமதி பெற்று) ஒரு 10, 15 கி.மீ. சென்றால் அதன் முடிவில் நாம் எழில் கொஞ்சும் மலைத் தொடரையும், எப்போதும் சாரலும் மழையுமாக இருக்கும் மிகக் குளிர்ந்த பிரதேசத்தை அடைவோம். இதுவே வெஸ்டர்ட்ன கேட்ச்மென்ட்-1.
போகும் வழியில் இரு பக்கத்திலும் விண்ணுயர்ந்த மலைகள். சூரிய ஒளியில் பட்டு மிளிரும் சிகரங்கள். கீழே ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளில் ஓவிய வடிவமாய் தேங்கி நிற்கும் நீர் பரப்புக்கள்.
தரைகளில் ஊசியிலைக் காடுகளை ஒத்து இருக்கும் உயர்ந்த வளர்ந்த மரங்கள். இடையிடையே பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற புல் வெளிகள். நாம், வாழ்க்கையில் காணாத நறுமணம் வீசும் தாவரங்கள், மூலிகைச் செடிகள் என்று எங்கு நோக்கினும் அழகு அழகு. அள்ள முடியாமல் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் பேரழகு.
பொதுவாக இப்பகுதியை நன்கு கண்டுகளிக்க வேண்டுமெனில் (பாருங்கள் புகைப்படத் தொகுப்பை) 10 பேர் குழுவாக அதற்கென்றே உள்ள பாதையில் நடந்து செல்ல வேண்டும் (டிரக்கிங்). இதற்கான ஏற்பாடுகளை ஊட்டியில் உள்ள சில அமைப்புக்கள் செய்து தருகின்றன.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
பார்சன் வேலி அணைக்கட்டு மிக அழகான பகுதியாகும். இந்த அணைப் பகுதியில் மட்டும் அரை நாளைக் கழிக்கலாம். காஷ்மீரைப் போல் இருக்கும் பகுதி இது. அதனால்தான் ரோஜா படத்தின் கதாநாயகன் தீவிரவாதியின் பிடியில் இருந்து விடுபட்டு இந்தியப் பகுதிக்குள் ஓடி வரும் காட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டது.
|