கோவில், திருப்பதி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஜெகநாத் யாத்ரா மேற்கொள்கின்றனர்.
அயல்நாடுகளுக்கான ஆன்மீக சுற்றுலா சந்தை வலிமையாக இருந்தாலும், பலதரப்பட்ட ஆன்மீக ஸ்தளங்களை கொண்டு உலகளவில் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது. பண்பாட்டு கலாச்சார சுற்றுலாவுடன் ஆன்மீக சுற்றுலா மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை அறிய விரும்புபவர்கள் இதுபோன்ற புனித ஸ்தளங்களுக்கு பயணிக்கின்றனர்.
சாதனைக்கு விடுக்கப்படும் சவால்கள்!
கல்வி, கட்டிடக்கலை ஆகியவற்றிற்காகவும் இந்த பகுதிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசும், மாநில அரசும் போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம்.
ஓம்கரெஷ்வர், உஜ்ஜய்ன், அமர்கந்தக், சித்ராகூட், பெட்காட், மகேஸ்வர் ஆகிய பகுதிகளில் ஆன்மீக சுற்றுலாவை வளப்படுத்த மத்திய பிரதேச சுற்றுலா மேம்பாட்டுத்துறை முயற்சித்து வருகிறது. சார் டாம்ஸ் பகுதிக்கு ஹெலிகாப்டர் சேவையை விரிவுபடுத்த உத்தரகாண்ட் அரசும், புத்தமத ஸ்தளங்களை மேம்படுத்த இமாச்சல் அரசும் திட்டமிட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகையில், "கங்கோதரி, பத்ரிநாத் பகுதிகளைப்போல ஷார் டாம்ஸ்க்கு ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சீக்கியர்களின் புனித ஸ்தளமான ஹேம்குந்த் சாகிப் பகுதிக்கும் இச்சேவை அளிக்க விரும்புகிறோம். மேலும் ஹெலிகாப்டர் தளத்திற்கு இலவச குடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், தீயணைப்பு வசதிகளை இலவசமாக அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தியா மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களை கொண்டிருந்தாலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு சாலைப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாமல் உள்ளது. அனைத்திற்கும் மேலாக நியாயமான கட்டணத்தில் தரமான சேவை அளிக்கப்பட வேண்டியது தான் சுற்றுலாத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக உள்ளது. இந்த சவால் உடைபட்டால் உலகளவில் இந்தியாவே சுற்றுலாத்துறையில் முதலிடம் வகிக்கும்.
|