கோடை காலத்தில் நிம்மதியாகத் தங்கி வர அந்த மாளிகை கட்டப்பட்டதாம். அது தற்போது அருங்காட்சியகமாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகையில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி பற்றிய அழகிய கைவண்ணங்களும், அழகிய ஓவியங்களும் நிறைந்திருக்கும்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை எல்லாம் பார்க்க ஒரு நாளை ஒதுக்கிவிடுங்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு உங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினால் பின்னர் மறுநாள் காலையில் கோயில்களைக் காணத் தயாராகலாம்.
ஸ்ரீரங்கநாதர் ஆலயம், ஸ்ரீ ராதா மாதவா கோயில், 450 படிகட்டுகளைக் கொண்ட வெங்கடரமணா கோயில்களும் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
மேலும், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுடச்சுட போடப்படும் ஜாங்கிரி எனப்படும் ஒரு இனிப்புப் பண்டத்தை சுவைத்தபடி காவிரி நதியின் சலசல ஓசையில் லயிக்கலாம்.
எங்கு தங்கலாம்?
ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் அங்கு அதிக அளவிலான தங்கும் விடுதிகள் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் நதியோரத்தில் அமைந்திருக்கும் விடுதி, கோட்டையின் பின்னணியில் அமைந்திருக்கும் விடுதி என தேர்ந்தெடுத்து தங்குவது சிறப்பாக அமையும்.
எப்படிச் செல்வது?
விமான மார்கம் : உள்ளூர் விமானம் மூலமாக பெங்களூர் விமான நிலையத்தைச் சென்றடையலாம். அங்கிருந்து சாலை மார்கமாக செல்லலாம்.
ரயில் மார்கம் : பெங்களூர் ரயில் நிலையம் மிகவும் முக்கியமான சந்திப்பு நிலையமாகும். அங்கிருந்து மைசூர் விரைவு ரயில் மூலமாக ஸ்ரீரங்கப்பட்டினம் போகலாம்.
சாலை மார்கம் : தேசிய நெடுஞ்சாலை 17ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தை நோக்கி பயணிக்கலாம். மாதுர், மண்டியா வழியாகச் செல்ல வேண்டும்.
|