முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > தமிழ் நாடு
 
அழகிய வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3
Webdunia
upperbavani dam
webdunia photoWD
தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடை என்று கருதப்படும் நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி வனப் பகுதியுடன் இணைந்தது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் ஆகும்.

தமிழக - கேரள எல்லையில் உள்ள முழுமையாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட். இப்பகுதி வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1, 2, 3 என மூன்று பகுதிகளாக உள்ளது.

தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிகமான மழைப் பொழிவு உள்ளதால் இதனை வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் (மேற்கு மழைப் பொழிவு பகுதி) என்று அழைக்கின்றனர்.

பவானி உள்ளிட்ட பல நதிகள் உற்பத்தியாகும் இந்த வெஸ்டர்ன் கேட்ச்மன்ட்டில் கிடைக்கும் நீரினால்தான் இப்பகுதியில் அமைந்துள்ள குந்தா உள்ளிட்ட பல நீர் மின் நிலையங்கள் இயங்குகின்றன.

இங்கு பொழியும் மழையில் கிடைக்கும் நீர் ஆங்காங்கு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, சில இடங்களில் சுரங்கங்கள் வழியாக அணைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மனிதர்கள் அண்ட முடியாத இந்த வனப்பகுதி, அனுமதி பெற்று சென்று பார்த்தவர்களின் எண்ணங்களில் இருந்து என்றென்றும் அகலாது. இயற்கை எழில் கரைபடாமல் மிளிரும் அற்புத பூமி அது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வனச்சரகம் வழியாக குந்தா சென்று அங்கிருந்து மேலும் 28 கி.மீ. ஆள் நடமாட்டமே இல்லாத (தேயிலைத் தோட்டங்கள் தவிர) சாலைகளில் பயணம் செய்தால் நாம் அடையும் இடம் மேல் பவானி.

பவானி நதி உற்பத்தியாகின்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அணையில்தான் அதிகமான அளவிற்கு நீர் தேக்கப்பட்டு மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Madippu malai
webdunia photoWD
இந்த அணை அமைந்துள்ள பகுதி அவ்வளவு அற்புதமானது. அங்குள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் கண்காணிப்பு இல்லத்திற்கு முன் உள்ள புல்மேட்டில் இருந்து அணையைப் பார்க்க வேண்டும். நெடுதுயர்ந்த மலைகள், நடுவில் அணை, சுற்றிலும் பச்சைப் பசேலென அடர்த்தியாக வளர்ந்த மரங்கள். எங்கு காணினும் பசுமை எப்போதும் ஈரம். நீங்கள் நின்று பார்க்கும் அந்த இடம் 8,000 அடி உயரமாகும்.
1| 2
புகைப்பட கேலரி
வெஸ்டர்ன் கேட்ச்மன்ட்டின் அழகிய காட்சிகள்!
மேலும்
புகழ்பெற்ற தஞ்சாவூர்
கொடைக்கானல்