தமிழ் நாடு | சுற்றுலாத் தலங்கள் | திருத் தலங்கள் | கடலோரம் | மலை அரசி | வன உலா | சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சுற்றுலா » திருத் தலங்கள் » செங்கனூரில் ‌விரைவு ரயில்கள் நிற்கும் (Senganur Railway Station | Express Trains)
Feedback Print Bookmark and Share
 
கேரளா‌வி‌ல் உ‌ள்ள சப‌ரிமலை ஸ்ரீ ஐய‌ப்ப‌ன் கோ‌யிலு‌க்கு வரு‌ம் ப‌க்த‌ர்க‌ளி‌ன் வச‌தி‌க்காக செ‌ங்கனூ‌ரி‌ல், அ‌வ்வ‌ழியாக‌ச் செ‌ல்லு‌ம் அனை‌த்து ‌விரைவு ர‌யி‌ல்களு‌ம் ‌5 ‌நி‌மிட‌ம் ‌நி‌ன்று செ‌ல்ல உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அதாவத சபரிமலைக்கு ரயில்கள் மூலம் செல்லும் பக்தர்கள் செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இதனால், வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி வரை செ‌ங்கனூ‌ர் ரயில் நிலையத்தி‌ன் வ‌ழியாக‌ச் செ‌ல்லு‌ம் அனை‌த்து ‌விரைவு ர‌யி‌ல்களு‌ம் 5 நிமிடம் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் ‌விரைவு ர‌யி‌ல் (வ.எண். 2697), திருவனந்தபுரம்- சென்னை சென்டிரல் விரைவர‌யி‌ல் (2698), திருவனந்தபுரம்- புதுடெல்லி விரைவர‌யி‌ல் ( 7229), கன்னியாகுமரி-பெங்களூர் விரைவர‌யி‌ல் (6525), திருவனந்தபுரம்- ஐதராபாத் விரைவர‌யி‌ல் , திருவனந்தபுரம்-சென்டிரல் மெயில் (2624), திருவனந்தபுரம்-மங்களூர் விரைவர‌யி‌ல் (6629), திருவனந்தபுரம்- மங்களூர் மெயில் (6347) ஆகிய ரயில்கள் செங்கனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்