தண்டத்தை வாங்க வந்த எமன் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் கோயிலின் மேற்கு புற வாசல் மூடப்பட்டது. அது இன்று வரை திறக்கப்படுவதே இல்லை என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
ஈஸ்வரனையும் கருணாம்பிகை அம்மனையும் வழிபட்டு விட்டு உள்பிரகாரத்தில் வலது புறமாக சென்றால், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. இது தவிர, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.
கோயிலின் தென்கிழக்கு மூலையில் நவகிரகங்களுக்கான சந்நதி அமைந்துள்ளது.
திருக்கடையூருக்கு இணையாக சொல்லப்படும் இத்திருத்தலத்தில், சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விசேஷமானது. பெருமானையும், அம்பாளையும் தரிசிப்பவர்களுக்கு பாப விமோசனமும், ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
இத்திருத்தலத்தின் விருட்சம் மகா வில்வம் ஆகும். கோயிலின் அருகில் திருக்குளம் அமைந்துள்ளது. எமனால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய உண்டாக்கிய குளம் என்பதால் இத்திருக்குளத்திற்கு எம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகளும், ஆருத்ரா, நவராத்திரி திருவிழாக்களும் சிறப்பாக நடக்கின்றன.
தினமும் இந்த கோயிலில் ஆறு கால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு 11 மணி வரை பக்தர்கள் வழிபட கோயில் நடை திறந்திருக்கும். பிறகு மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
எப்படி செல்வது
சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும். வேளச்சேரிக்கு முன்பு தண்டீஸ்வரம் எனும் இடத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.
கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது ஆட்டோவிலும் செல்லலாம். |