மன்னவனூர் செம்மறி ஆடு ஆய்வுப் பண்ணை!
அற்புதமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆய்வுப் பண்ணை. அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். இங்கு பாரத் மெரினோ எனும் செம்மறி ஆட்டு இனம் நன்கு வளர்க்கப்பட்டு அதன் ரோமங்கள் எந்த அளவிற்கு பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு லாபம் தருகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறது.
ஆடுகள் மட்டுமல்ல ரஷ்யாவின் சில்சிலா மற்றும் ஜெர்மனியின் முசு முசு முயல் வகைகளை இனப்பெருக்கம் செய்தும் ஆய்வு செய்து வருகின்றனர். சுற்றுலாவுடன் சற்று வணிக ரீதியாக புத்தியையும் தேற்றிக் கொள்ளலாம்.
கேரள எல்லையில் உள்ள கவுஞ்சி!
இயற்கை எழிலுடன் சற்றும் கரைபடாமல் சிதையாமல் அப்படியே உள்ள எழில் கொஞ்சும் மலைக் கிராமம் கவுஞ்சி. வெள்ளை பூண்டு முதல் ரோஜாப்பூக்கள் வரை மலைச்சரிவுகளில் படிப்படியாக வெட்டப்பட்ட வேளாண் நிலங்களில் பயிரிடுகின்றனர். நடந்து சென்றே அனுபவிக்கலாம்.
சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு காலையில் புறப்பட்டால் மாலை வரை கண்ணாரக் காணும் காட்சிகள் ஏராளம் உண்டு இந்தப் பாதையில். இதற்கு மேல் கொடைக்கானல் சென்றால் கவுஞ்சியை உங்களது எல்லையாகக் கொள்ளுங்கள்.
|