அப்படி திருடப்பட்ட பவர்ஃபுல் கேலக்ஸியை வைத்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அரங்கம் சிரிப்பலையில் சின்னாபின்னமாகிறது. நிலவில் சென்று ஹாயாக சுற்றுவதும், அழகான நந்தவனத்தை உருவாக்கி ஆடிப் பாடுவதுமாக அமர்க்களப் படுத்துகிறார்கள்.
இடையிடையே மேன்ஷன் வாடகை கேட்டு வந்துவிடும் எம்.எஸ். பாஸ்கர், நகைக் கடைக்கு சொந்தம் கொண்டாடும் இளவரசு, கடவுளையே காதலிக்கும் மெஸ் ஓனர் ஜோதிர்மயி, கிராமத்துப் பெரியவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் கருத்தம்மா பட புகழ் பெரியார்தாசன், மேன்ஷனில் குடியிருக்கும் பெரியவர் வி.எஸ். ராகவன், சந்தானம் காதல் செய்யும் மதுமிதா என்று அத்தனை நடிகர்களின் காட்சி அமைப்பிலும் ஒரு எதார்த்தம் உள்ளது.
சாதாரண மனிதனாக மாறிய பிரகாஷ் ராஜ், கூலி வேலை செய்வதும், பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சந்தானம் - கருப்பை சாதுர்யமாகப் பேசி காப்பாற்றும் காட்சிகளில் பிரகாஷ் ராஜ் மிரட்டுகிறார்.
இரண்டு ரூபாய்க்கு பூ வாங்கிக்கொண்டு போய் மதுமிதாவிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு, அந்த பூவை பாதி விலைக்கு கொடுப்பதும், போதையில் பெண் தெய்வங்களை பிரகாஷ் ராஜிடம் நலம் விசாரிப்பதும் சிம்புதேவனின் குறும்புகள். காமெடியுடன் சேர்த்து பல நல்ல கருத்தினையும் சொல்லியிருக்கிறார். பாடல்கள் சுமார் ரகம். ஒளிப்பதிவில் குறைசொல்ல முடியாத அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார் கேமராமேன் செளந்திரராஜன்.
ஆக, மொத்தத்தில் குடும்பத்தோடு இரண்டரை மணி நேரத்தை ஜாலியாக போக்கும் படம்தான் இந்த 'அறை எண் 305ல் கடவுள்.
|