முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > நட்சத்திர பேட்டி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆக்சனிலும் கலக்குவேன் - நெஞ்சைத் தொடு இயக்குனர் ராஜ்கண்ணன்!  Search similar articles
webdunia photoWD
'நெஞ்சைத் தொடு' புதுமுகம் ஜெமினி - லட்சுமிராய் நடித்து வெளியான படம். இயக்குனர் பாக்யராஜ், 'ரெட்டை சடை வயசு', ஆயுத பூஜை' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சி. சிவகுமார் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்து தொழில் கற்றவர். தற்போது இரண்டாவது படமாக 'காட்டான்' எனும் பெயர் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். அவரிடம் நமது வெப்துனியாவுக்காக சந்தித்தபோது...

உங்களுடைய சொந்த ஊர் எது. எப்படி சினிமா ஆர்வம் ஏற்பட்டது?

என்னோட சொந்த ஊர் புதுக்கோட்டையில இருக்கிற பொன்னமராவதி. எனக்கு சினிமா ஆர்வம் பள்ளிக்கூடம் படிக்கும்போதே இருந்தது. எங்க ஊர்ல இருந்த அலங்கார், மீனா ரெண்டு தியேட்டர்கள் இருக்கும். டிக்கெட்டுக்கான காசை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு படத்துக்கு ஓடிடுவேன். அப்போ பாலசந்தர், பாரதிராஜா அப்புறம் பாக்யராஜ் எல்லாரும் கொடிகட்டி பறந்தாங்க.

அவங்களோட ஒரு படத்தையும் நான் பார்க்காம விட்டதில்லை. 'சுவர் இல்லாத சித்திரங்கள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அந்த ஏழு நாட்கள்', 'நீர்க்குமிழி' போன்ற படங்களைப் பார்த்து அதோட வெற்றி ·பார்முலா என்னங்கறத தெரிஞ்சுகிட்டேன். அதே மாதிரி மணிரத்னம் சாரோட படங்களையும் பார்த்து அவரோட மேக்கிங் ஸ்டைலைப் பார்த்து வியந்திருக்கேன். அதேபோல யாஷ் சோப்ரா. சுராஜ் ஆர். பார்த்தியாயா இயக்கின இந்தி படங்களும் பார்த்தேன். 'வசந்த மாளிகை', 'வருஷம் 16' படங்களை எத்தனை தடவை பார்த்தேன்று எனக்கே தெரியாது. அதுக்கப்புறம் விக்ரமன், பாசில், மணிரத்னம் சாரோட பங்களை விரும்பி பார்த்தேன்.

சென்னைக்கு நீங்கள் வந்ததுமே உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைத்துவிட்டதா?

அப்போது இருந்த எல்லா இயக்குனர்கள்கிட்டயும் தினம் வாய்ப்பு தேடி அலைவேன். கிடைக்கல, ஆனாலும் சோர்ந்து போகாம விடா முயற்சியோட பாக்யராஜ் சாரை மட்டும் பார்த்துகிட்டே இருந்தேன். அவர் மூலமா கோ-டைரக்டர் மெய்யப்பன் சாரோட அறிமுகம் கெடைச்சி சிவகுமார் சார்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்தேன். அப்படி சேர்ந்ததுக்கும் ஒரு கதை இருக்கு. சிவகுமார் சாரும் அவரோட நண்பரும் 'தில்வாலியே துல்ஹானியா லேஜாயங்கே' படத்துக்கு ரெண்டு தடவை வந்தும் டிக்கெட் கிடைக்காம திரும்பிப் போனதைப் பார்த்த நான் மூணாவது நாள் டிக்கெட்டோட தியேட்டர் வாசல்ல காத்துக்கிட்டு இருந்தேன். அன்னைக்கும் அவங்க டிக்கெட் கிடைக்காமப் போக, நான் எதேச்சையா பார்த்த மாதிரி என்கிட்ட இருந்த டிக்கெட்டை கொடுத்து படம் பார்க்க வெச்சேன்.

அதுக்கப்புறம் ஒரு வாரம் அவர் கண்லயே படாம திடீர்னு ஒரு நாள் முன்னாடி போயி நின்னேன். என்னப்பா 'அன்னைக்கு இடைவேளை விட்டதும் தேடினேன், ஆளக்காணுமே' என்றார். அப்படி பார்த்திருந்தா தேங்ஸ்னு சொல்லிட்டு போயிருப்பீங்க. அதனாலதான் சார் ஒரு வாரம் கழிச்சி பார்க்க வந்தேன்றதையும், என் ஆர்வத்தையும் சொல்ல உடனே 'ரெட்டை ஜடை வயசுல' சேர்த்துக்கிட்டார். அதுக்குப் பின்னாடி பாக்யராஜ் சாரோட டிஸ்கஷன், அப்புறம் 15 குறும்படம், எட்டு சீரியல்ல வேலை பார்த்தேன். அதுக்கப்புறம்தான் 'நெஞ்சைத் தொடு' படம் இயக்கும் வாய்ப்பு நண்பர் கிட்டு மூலம் கிடைச்சது. அதேபோல, என் மூத்த அண்ணன் நாகராஜன் மூலமாவும் நிறைய ஒத்துழைப்பு கெடைச்சது.

உங்கள் அடுத்தப் படமான 'காட்டான்' படத்தைப் பற்றி சொல்லு‌ங்கள்?

ஆரம்பத்துல 'காட்டான்'னு தலைப்பு வெச்சேன். ஆனா அதே சாயல்ல இன்னொரு டைட்டிலும் பேப்பர்ல வந்ததால நான் வேற பெயர் தேடிட்டு இருக்கேன். இந்த கதையோட நாயகன் காட்டான் மாதிரிதான் இருப்பான். எதை செஞ்சாலும் காட்டுத்தனமா இருக்கும். வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காதவனை காட்டான் மாதிரி வளர்ந்திருக்கான் பாருன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி ஒருத்தருக்கும் கட்டுப்படாதவன்தான் இந்தப் படத்தோட ஹீரோ. முதல் படத்துல காதல், செண்டிமெண்ட் எல்லாம் வெச்சிருக்கேன். அதுக்கு முற்றிலும் மாறுபட்ட படம் இது. முழுக்க முழுக்க ஆக்சன்தான். மதுரை-காரைக்குடி இடைப்பட்ட ஊர்ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தான் இதுல காட்டப் போறேன்.
1 | 2  >>  
மேலும்
முழுக்க முழுக்க எதார்த்தமான படம் - இயக்குனர் மஜீத்!
அமீர்கான் தயாரிப்பில் நடிக்கிறேன் - ஜெனிலியா!
ச‌‌ந்தன‌க்காடு இயக்குநர் வ. கெளதமன் நேர்காணல்!
ஆ‌க்ஷ‌ன்தா‌ன் நடிகரு‌க்கு அடையாள‌ம்!
காமெடி‌ப் பட‌ங்க‌ளி‌ல் நடி‌ப்ப‌தி‌ல் கவலை‌யி‌ல்லை!
ரசிகர்களின் ஆதரவின்றி நடிகர்கள் வளர முடியாது - விக்ரம்!