சாலக்குடியில் கார்த்தி, அனுஷ்கா
வெள்ளி, 9 டிசம்பர் 2011( 16:30 IST )
சுராஜ் இயக்கும் பெயரிடப்படாதப் படத்தில் நடித்து வருகிறார்கள் கார்த்தியும், அனுஷ்காவும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சாலக்குடியில் நடந்து வருகிறது.
அடர்த்தியான காட்டில் படப்பிடிப்பு என்றால் உடன் நம்மவர்கள் வண்டியேறுவது சாலக்குடிக்கு. அங்குதான் அடர்ந்த காடு அழகுடன் உள்ளது. சுராஜின் படமும் இங்குதான் வளர்ந்து வருகிறது. சாலக்குடியின் ஒரே பிரச்சனை யானைகள். தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தங்கள் இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் மனிதர்களை கண்டால் விடாது. துரத்தி தொலைத்துவிடும்.
இந்த யானைகளிடமிருந்து முழு பாதுகாப்புக்கு உத்தராவதம் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருக்கிறார். இது யானைகளுக்கு தெரியுமா?