எந்திரன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் அளவுக்கு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி இது.
எந்திரன் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 180 கோடிகள் என்கின்றன செய்திகள். இந்த மெகா பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார் ஷங்கர்.
டாக்கி போர்ஷன் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாக நெருக்கமான வட்டாரம் தகவல் சொல்கிறது.
இந்தப் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டாலும் கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் 2010ல் தான் படம் வெளியாகும் என்கிறார்கள். அனேகமாக 2010 தீபாவளிக்கு படம் வெளியாகும். அதற்குமுன் சுல்தான் தி வாரியரை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது ரஜினி வட்டாரம்.