ஜீவாவின் புதிய படம்

வெள்ளி, 6 நவம்பர் 2009( 20:25 IST )
பாலா தனது புதிய படத்துக்கு முதலில் தேர்வு செய்தது அண்ணன், தம்பியான ரமேஷ் மற்றும் ஜீவாவை. முன்னணி ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாமே என நண்பர்கள் கூறிய அறிவுரையின்படி அவர்களுக்குப் பதில் விஷால், ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலா.
இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.பி.சௌத்ரியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "ஜீவாவும், ரமேஷும் ரொம்ப பிஸியா இருக்காங்க. பாலா கேட்ட தேதியில் கால்ஷீட் ஒதுக்க முடியலை. அதனால் பாலா வேறு யாரையோ வைத்து படம் பண்றார்."
இந்த பதிலுக்கு வாய்க்குள் சிரிப்பை அடக்க நிருபர்கள் பட்ட கஷ்டம் தனிக்கதை.
நம் விஷயத்துக்கு வருவோம். ரமேஷ் எப்படியோ, ஜீவா ரொம்ப பிஸியாகவே இருக்கிறார். கச்சேரி ஆரம்பம், சிங்கம் புலி, ரவுத்ரம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.
அத்துடன் இயக்குனர் ரமணாவின் அசிஸ்டெண்ட் சோழன் இயக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோ. தமிழ்க்குமரன் படத்தை தயாரிக்கிறார். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முழுமையடைந்ததும் முறைப்படி அறிவிக்கயிருக்கிறார்கள்.