முதல் படம் பருத்திவீரனுக்கு இரண்டு வருடங்கள். இரண்டாவது படம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு வருடங்களைத் தாண்டியும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த ஜவ்வு மிட்டாய் பிசினஸ் இனி கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் கார்த்தி.
லிங்குசாமியின் பையா படத்தில் நடித்து வருகிறவர், அடுத்து சுசீந்திரன் இயக்கும் நான் மகான் அல்ல படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கயிருப்பது வெற்றிமாறன் இயக்கத்தில்.
ஆடுகளம் படத்தை தனுஷை வைத்து இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து வடசென்னை என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிப்பவர் கார்த்தி. ஆடுகளம் முடிந்த பிறகு வடசென்னை தொடங்கயிருக்கிறது.