கமுக்காக முடித்திருக்கிறார்கள் அந்த பஞ்சாயத்தை. சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடம் என்பதால் கோடம்பாக்க எல்லையை தாண்டவில்லை விஷயம்.
வேறொன்றுமில்லை. தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் அல்லவா? அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று போர்க் கொடி தூக்கியிருக்கிறார் ஒரு உதவி இயக்குனர். தான் எழுதிய சேவல் காடு என்ற கதையைதான் வெற்றிமாறன் ஆடுகளமாக எடுத்து வருகிறார் என்பது இவரது குற்றச்சாற்று.
விசாரித்துப் பார்த்ததில் உதவி இயக்குனரின் புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்திருக்கிறது. பாதி படம் எடுத்த பிறகு பஞ்சாயத்தை கூட்டி என்ன பயன்? கதைக்கு காசு தருகிறோம் என்றிருக்கிறார்கள்.
காசு மட்டும் பத்தாது டைட்டிலில் பெயரும் போட வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார் உதவி இயக்குனர். நியாயமான குரல் என்பதால் கோரிக்கை ஏற்கப்படும் என்கிறார்கள்.