கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சூர்யாவின் சிவந்த கரங்கள்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
கொடுத்து சிவந்த கரங்கள் என்பார்களே... சிவகுமார் மைந்தனுக்கு அது சாலப் பொருந்தும். தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு நற்பணிகள் செய்துவரும் சூர்யா, புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிவ் இண்டியா இணையதள‌ம், ஜாய் ஆஃப் கிவ்விங் வீக் என்ற புரோகிராமை சென்னை பார்க் ஹோட்டலில் நடந்த விழாவில் அறிவித்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்கு‌த் தருவேன் என பலத்த கைத்தட்டலுக்கு நடுவே தெ‌ரிவித்தார். இந்த தொகை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும்.

மாதம் ஒருமுறை ஏதேனும் தொண்டு நிறுவனத்துடன் நேரத்தை செலவிடுவதாக முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார் சூர்யா.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சூர்யா, அகரம் பவுண்டேஷன், கிவ் இண்டியா