ரசிகர்கள், திரைத்துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்த நாடோடிகள் நேற்று வெளியானது. சுப்பிரமணியபுரத்தை இயக்கிய சசிகுமாரும், அதில் நடித்த சமுத்திரக்கனியும் இணைந்து உருவாக்கிய படம் என்பதால் நாடோடிகளின் வெளியீட்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
நேற்று வெளியான இந்தப் படத்துக்கு தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் படத்திற்கு கூட்டம் அலைமோதியது. முதல் காட்சியைவிட இரண்டாவது காட்சிக்கு கூட்டம் அதிகம் என்றார் விநியோகஸ்தர் ஒருவர்.
நாடோடிகளின் வடஆற்காடு, தென்ஆற்காடு விநியோக உரிமையை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வாங்கியுள்ளார். இரு ஏரியாக்களிலும் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது.
சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு, பசங்க வரிசையில் தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பிக்கும் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது நாடோடிகள். வாழ்த்தி வரவேற்போம்.