கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கமலுக்கு நாடார் அமைப்பு கண்டனம்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தசாவதாரம் படத்தில் நாடார்களுக்கு எதிரான வசனம் இடம்பெற்றுள்ளதற்கு இடம்பெற்றுதற்கு நாடார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தசாவதாரத்தில் வரும் தலித் கேரக்டர் வின்சென்ட் பூவராகன், மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் போராளி. இவருக்கும் மணல் கொள்ளைக்கு காரணமான பி. வாசுவுக்கும் படத்தில் காரசாரமான விவாதம் ஒன்று இடம்பெறுகிறது. இந்த வசனம் இப்போது கமலுக்கு பிரச்சனையாகியிருக்கிறது.

பூவராகன் பி. வாசுவை நாடார்களை குறிக்கும் பிரச்சனைக்குரிய ஒரு சொல்லால் அழைப்பதாகவும், இது தங்கள் சாதியை இழிவுபடுத்துவதாகவும் கூறி சில நாடார் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. கண்டன போஸ்டர்களுடன் தொடங்கியிருக்கும் இந்த போராட்டம் கமலின் ரியாக்சனை பொறுத்து மாறுபடுமாம்.

மர்மயோகியில் மூழ்கியிருக்கும் கமலின் காதுகளுக்கு இந்தப் போராட்டத்தின் குரலை கேட்கும் திறன் கிடையாது என்பது பாவம் போராடுகிறவர்களுக்குத் தெரியாது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கம‌ல் நாடார் அமைப்பு