முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு!
சென்னை மற்றும் பிற பகுதிகள் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் 'நியூட்டனின் மூன்றாம் விதி' இயக்குனர் தாய் செல்வா. எஸ்.ஜே. சூர்யா வித்தியாசமான பாத்திரத்தில், வழக்கமான இரண்டு அர்த்த வசனம் எதுவும் இல்லாமல் ஆக்சன் கலந்த காதல் படத்தில் நடிப்பது இது முதல் முறை.

இப்படத்தின் இயக்குனர் தாய் செல்வா. சின்னத்திரையில் பல தொடர்களை இயக்கி பின் பெரிய திரைக்கு வந்த இயக்குனர் சமுத்திரக்கனியிடமும், இதே பாணியில் பெரிய திரைக்கு வந்த 'மெட்டி ஒலி' திருமுருகனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். இந்த இரண்டு இயக்குனர்களின் வழியில் இவரும் ஜெயா டி.வி.யில் 'யார்?' என்ற மர்மத் தொடரை இயக்கிவிட்டு பின் இந்தப் படம் மூலம் பெரிய திரைக்கு வந்திருக்கிறார் தாய் செல்வா என்கிற தாய் செந்தில்குமார்.

இவரின் குருவைப் போல இவரும் வெள்ளித்திரையில் பெரிய வெற்றி பெறவேண்டுமென்றால், சீரியல் பாணியை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். வெற்றி பெற வாழ்த்துவோம். அதேபோல் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இந்தப் படத்தின் மூலமாக ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தும் வரட்டும்.
மேலும்
சர்ச்சைக்குள்ளாகும் நமீதா!
க‌ண்டுகொ‌ள்ளாத அஸின்!
ஒரு தொடர்கதை திரைப்படமாகிறது!
சத்யஜித் ரே நினைவு தினம் அனுசரிப்பு!
அனுசரிக்கும் தமன்னா!
சூ‌ப்ப‌ர் ‌ஸ்டாரை உருவா‌க்கு‌ம் சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர்!