வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (13:37 IST)

தொடர்ந்து இரண்டு நாட்களா? முடியவே முடியாது: சேவாக் கருத்து

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு நாடுகளில் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் மொத்த 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
 
இந்திய தொடர்ந்து 2 இரண்டு விளையாடும்படி கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
ஒருதினப் போட்டிகளில் விளையாடும் வீரர், சோர்வில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 48மணி நேரம் தேவை. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடுவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.