<?xml version="1.0" encoding="UTF-8"?><?xml-stylesheet href="/includes/rss.xsl" type="text/xsl" media="screen" ?><rss version="2.0" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>இன்றைய மங்கை</title><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/</link><description>இதர வாசிப்பு &gt; இன்றைய மங்கை</description><copyright>Copyright Webdunia.com</copyright><lastBuildDate>Tue, 09 Feb 2010 11:11:13 GMT</lastBuildDate><language>ta-IN</language><image><title></title><url></url><link></link></image><item about="handheld"><title>த‌ண்டனை கொடு‌ப்பது தவறானது</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/09/1100209073_1.htm</link><description>குழ‌ந்தைகளு‌‌க்கு ந‌ல்ல ஒழு‌க்க‌த்தை கொ‌ண்டு வர வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஆனா‌ல் அதனை எ‌ப்படி கொ‌ண்டு வருவது எ‌ன்பதுதா‌ன் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாத ஒ‌ன்றா‌கிறது. த‌ட்டி‌க் கொடு‌ப்பது, ந‌ல்ல வா‌ர்‌த்தைகளை சொ‌ல்வது, அளவான பாரா‌ட்டுக்க‌ள் இவையே குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்ல பழ‌க்க‌த்தை‌க் கொ‌ண்டு வரு‌ம் வ‌ழியாகு‌ம். ஒழு‌க்க‌த்தை த‌ண்டனை மூலமாக கொ‌ண்டு வர முடியாது. ஆகவே, அடி‌ப்பது, ‌கி‌ள்ளுவது போ‌ன்ற செய‌ல்களை ‌நீ‌ங்க‌ள் ‌வி‌ட்டு ‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைக‌ள் அட‌ம்‌பிடி‌‌க்காம‌ல் இரு‌க்க காசு கொடு‌ப்பது, சா‌க்லே‌ட், ‌பி‌‌ஸ்கெ‌ட் வா‌ங்‌கி‌க் கொடு‌ப்பது‌ம் தவறான நடைமுறையை‌ ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌ம். தவறான செயலை செ‌ய்யு‌ம் போது இது ‌மிகவு‌ம் தவறான ‌விஷய‌ம் எ‌ன்பதை பல முறை எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு அவ‌ர்களது செய‌ல்களை ம‌தி‌ப்‌பிடு‌ங்க‌ள்.</description><pubDate>Tue, 09 Feb 2010 11:07:44 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/09/1100209073_1.htm</guid></item><item about="handheld"><title>அழகாக‌த் தோ‌ன்ற அழகு‌க் கு‌றி‌ப்‌பு</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/09/1100209071_1.htm</link><description>மாநிற தோற்றம் கொண்ட பெண்களைப் பொறுத்தவரை மேக்கப்பின் போது சற்றே அதிகமாக ரோஸ் பவுடரை பூசினால் பொலிவு பெறுவர். ஓரளவுக்கு மேல் பவுடர் பூச்சு அதிகரித்து விடாதவாறு கவனமாக மேக்கப் செய்தல் அவசியம். உதட்டுச் சாயத்தைப் பொறுத்தவரை, மாநிறம் கொண்டோர் தேவைப்பட்டால் மட்டுமே போட்டுக் கொள்ளலாம். மா‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம், கரு‌ப்பான ‌நிற‌‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌ம் ரோஸ் பவுடரை விரும்பினால் மட்டுமே பூசிக் கொள்ளலாம். இல்லையேல் சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்தும் முகப்பூச்சு பவுடரை குறிப்பிட்ட அளவில் எப்போதும் போல உபயோகிக்கலாம். கருப்பு நிற பெண்கள் அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற வகை‌யிலான உத‌ட்டு‌ச் சாய‌த்தை வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌ம், உத‌ட்டு ‌நிற‌ம் கொ‌ண்ட ‌உத‌ட்டு‌ச் சாய‌ங்க‌ள் ந‌ல்ல எடு‌ப்பான‌த் தோ‌‌ற்ற‌த்தை‌க் கொடு‌க்கு‌ம்.</description><pubDate>Tue, 09 Feb 2010 11:05:54 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/09/1100209071_1.htm</guid></item><item about="handheld"><title>எறு‌ம்‌புக‌ளி‌ல் இரு‌ந்து ‌விடுபட</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/09/1100209069_1.htm</link><description>‌வீ‌ட்டி‌ல் எ‌ங்கு பா‌ர்‌த்தாலு‌ம் எறு‌ம்பு ஓடு‌கிறதா? எறு‌ம்‌பி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க ஒரு வ‌‌ழி உ‌ள்ளது. 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌க் கூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள். மேலு‌ம், ‌சில இட‌ங்க‌ளி‌ல் எறு‌ம்பு வரலா‌ம் எ‌ன்று ‌‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல், அதாவது ‌வீ‌ட்டி‌ன் ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்தாத‌ப் பகு‌தி‌யி‌ல் ஒரு ‌சில தா‌னிய‌ங்களை இரை‌த்து வை‌த்தா‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் எறு‌ம்பு‌ங்க‌ள் இ‌ங்கு வ‌ந்து குடியேறு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு. பொதுவாக ‌வீ‌ட்டை சு‌த்தமாகவு‌ம், உல‌ர்வாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ண்டாலே எறு‌ம்புக‌ள் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அ‌ண்டாது. ஈரமாக மடி‌த்து வை‌த்த து‌ணிக‌ளிலு‌ம், எறு‌ம்புக‌ள் குடியேறு‌ம். எனவே, ஈரமான து‌ணிகளை உல‌‌ர்‌த்‌தி ‌பி‌ன் மடி‌க்கவு‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் உ‌ள்ள கொடிக‌ளிலு‌ம் எறு‌ம்புக‌ள் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்கு‌ம் கா‌ற்றடி‌க்கு‌ம் போது அவை ந‌ம்‌மீது ‌விழ‌க் கூடு‌ம். எனவே ‌வீ‌ட்டை சு‌த்த‌ப்படு‌த்து‌‌ம் போது கொடி‌க் க‌யிறுகளையு‌ம் துடை‌க்கவு‌ம்.</description><pubDate>Tue, 09 Feb 2010 11:04:12 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/09/1100209069_1.htm</guid></item><item about="handheld"><title>ஆடை‌யி‌ல் கறை ப‌ட்டா‌ல்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/09/1100209067_1.htm</link><description>ஆடை‌யி‌ல் ப‌ல்வேறு கறைக‌ள் பட வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு. எனவே ஒ‌வ்வொ‌ன்றையு‌ம் ஒ‌வ்வொரு ‌வித‌த்‌தி‌ல் அக‌ற்ற வே‌ண்டு‌ம். ஆடை‌யி‌ல் இ‌ங்‌க் கறைக‌ள் ப‌ட்டு‌வி‌ட்டா‌ல் உடனடியாக த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கழுவ வே‌ண்டா‌ம். அது பல இட‌ங்க‌ளி‌ல் பட வா‌ய்‌ப்பு‌ண்டு. எனவே முத‌லி‌ல் ஒரு ப‌ஞ்சை வை‌த்து ந‌ன்கு துடை‌த்து ‌வி‌ட்டு ‌பிறகு ஒரு சோ‌ப்பை‌ப் போ‌ட்டு துவை‌க்கவு‌ம். ஆடை‌யி‌ல் எ‌ங்காவது ‌சி‌வி‌ங்க‌ம் ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் உடனடியாக ஒரு பே‌ப்பரை வை‌த்து ந‌ன்கு அழு‌த்‌தி எடு‌த்து ‌விடவு‌ம். முழுவதுமாக எடு‌த்த ‌பிறகு ‌துவை‌க்கவு‌ம். ஏதேனு‌ம் அழு‌த்தமான கறை ப‌ட்டா‌ல் அ‌தி‌ல் எலு‌மி‌ச்சை சாறு ‌வி‌ட்டு துவை‌த்தா‌ல் உடனடியாக அக‌ண்டு‌விடு‌ம். வெ‌ள்ளை‌த் து‌ணிகளை எ‌ப்போதுமே த‌னியாக‌த் துவை‌த்தா‌ல் அத‌ன் ‌நிற‌ம் ம‌ங்காது.</description><pubDate>Tue, 09 Feb 2010 10:59:39 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/09/1100209067_1.htm</guid></item><item about="handheld"><title>‌உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டு மர மேஜைக‌ள்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/08/1100208032_1.htm</link><description>பழைய மர‌ச் சாமா‌ன்களு‌க்கு வா‌ர்‌னி‌ஷ‌் அடி‌க்க வே‌ண்டுமே எ‌ன்று யோ‌சி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்களா? உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ‌பிரவு‌ன் ‌நிற ஷூ பா‌லிசை ஒரு இட‌த்‌தி‌ல் அடி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்களு‌க்கு‌ப்‌ ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் அதையே முழு‌க்க அடி‌த்து ‌விடலா‌ம். மர டிராய‌ர்க‌ளி‌ல் சோ‌ப்பு அ‌ல்லது மெழுகை தே‌‌ய்‌த்து ‌வி‌ட்டீ‌ர்களானா‌ல் ‌சில நா‌ட்க‌ள் பய‌ன்படு‌த்தாம‌ல் இரு‌ந்தாலு‌ம் ‌திற‌க்கவு‌ம், மூடவு‌ம் எ‌ளிதாக இரு‌‌க்கு‌ம். மர மேஜைகளை எ‌ளிதாக ப‌‌ளி‌ச்செ‌ன்று ஆ‌க்க வே‌ண்டுமெ‌ன்றா‌ல், டீ‌த் தூ‌ள் போ‌ட்டு கொ‌தி‌க்க வை‌த்த த‌ண்‌ணீ‌ரி‌ல் து‌ணியை‌த் நனை‌த்து அதை‌க் கொ‌ண்டு துடை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். ஆ‌லி‌வ் எ‌ண்ணெயையு‌ம், ‌வி‌னீகரையு‌ம் சே‌ர்‌த்து கல‌ந்த கலவையை‌க் கொ‌ண்டு மர‌ச் சாமா‌ன்களை துடை‌க்க பு‌திதா எ‌‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள். மர‌ச் சாமா‌ன்க‌ள் ‌மீது எ‌ந்த கரை‌ப் ப‌ட்டாலு‌ம் உடனே துடை‌த்து ‌வி‌ட்டா‌ல் அது ‌நிலை‌த்து ‌விடாம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.</description><pubDate>Mon, 08 Feb 2010 07:06:45 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/08/1100208032_1.htm</guid></item><item about="handheld"><title>ம‌ன்‌‌னி‌ப்பு‌ம், ந‌ன்‌றியுண‌ர்வு‌ம்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/08/1100208031_1.htm</link><description>குழ‌ந்தைகளு‌க்கு முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் சொ‌ல்‌லி‌க் கொடு‌க்க வே‌ண்டியது ம‌ன்‌னி‌ப்பு‌க் கே‌ட்கு‌ம் பழ‌க்கமு‌ம், ந‌ன்‌றியை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ப‌க்குவ‌த்தையு‌ம். இத‌ற்காக ‌‌நீ‌ங்க‌ள் அவ‌ர்களை ந‌ன்‌றி சொ‌ல்ல சொ‌ல்‌லி க‌ட்டாய‌ப்படு‌த்த வே‌ண்டா‌ம். ‌‌நீ‌ங்க‌ள் எ‌ந்த தவறை‌ச் செ‌ய்தாலு‌ம் குழ‌ந்தையாக இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்க‌ளிட‌‌ம் ‌ம‌ன்‌னி‌ப்பு‌க் கோரு‌ங்க‌ள். வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது அது ஆ‌ட்டோ‌க் காரராக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌பேரு‌ந்‌தி‌ல் ‌டி‌க்கெ‌ட் வா‌ங்‌கி‌க் கொடு‌ப்பவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி ஒரு ந‌ன்‌றியை‌க் கூறு‌ங்க‌ள். இ‌ந்த பழ‌க்க‌ம் உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யிட‌ம் தானாகவே வ‌ந்து‌விடு‌ம். இது உ‌ங்களு‌க்கு‌ம் ந‌ல்லதாக இரு‌க்கு‌ம். உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் பழ‌க்க வழ‌க்க‌த்‌திலு‌ம் ந‌ல்ல மாறுத‌ல் ‌பிற‌க்கு‌ம். எ‌ப்போது‌ம் ம‌ற்றவரு‌க்கு உ‌ங்க‌ள் குழ‌ந்தையை ம‌ன்‌னி‌ப்பு‌‌க் கோர சொ‌ல்‌லியோ, ந‌ன்‌றி கூற சொ‌ல்‌லியோ க‌ட்டாய‌ப்படு‌த்தவே‌க் கூடாது. அ‌ப்படி செ‌ய்தா‌ல் ம‌ரியாதை‌க் குறைவான ஒரு ‌விஷயமாக குழ‌ந்தைக‌ள் அதனை எடு‌த்து‌க்கொ‌ள்ளு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை.</description><pubDate>Mon, 08 Feb 2010 07:05:45 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/08/1100208031_1.htm</guid></item><item about="handheld"><title>‌அளவான மே‌க்க‌ப்பே அழகு</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/08/1100208030_1.htm</link><description>த‌ன்னை‌த் தானே அழகாக அல‌ங்க‌ரி‌த்து‌க் கொ‌ள்வது எ‌ன்பது ஒரு கலை. அது எ‌ல்லோரு‌க்கு‌ம் வராது. அ‌ப்படி வராது எ‌ன்று ‌வி‌ட்டு‌விடவு‌ம் கூடாது. மேக்கப்-ஐ பொருத்தவரை நன்றாக சிவப்பு நிறம் உடையவ‌ர்க‌ள் முகத்தில் அதிக அளவில் பவுடர் பூச்சு செய்யத் தேவையில்லை. வழக்கமாக உபயோகிக்கும் சாதாரண பவுடர்களை அளவோடு பூசினாலே இயற்கையான அழகுடன் எளிமையும் சேர்ந்து கூடுதல் அழகைத் தரும். ரோஸ் பவுடர் போன்ற காஸ்மெட்டிக்ஸ் மற்றும் உதட்டுச் சாயங்களை மேக்கப் என்ற பெயரில் சிவப்பான தோற்றம் கொண்டோர் அதிக அளவில் போட்டுக்கொண்டால் இருக்கும் அழகைக் கெடுத்து வைக்கும் என்பதை மறவாதீர். ம‌ற்றவ‌ர்‌க‌ள் செ‌ய்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பத‌ற்காக நாமு‌ம் அதை‌ச் செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்காம‌ல், நம‌க்கு எது எடு‌ப்பாக இரு‌க்குமோ அதை ம‌ட்டு‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.</description><pubDate>Mon, 08 Feb 2010 07:04:25 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/08/1100208030_1.htm</guid></item><item about="handheld"><title>‌வீ‌ட்டை மேலோ‌ட்டமாக மா‌ற்ற</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/05/1100205070_1.htm</link><description>‌வீ‌‌ட்டை பொதுவாக சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டுமெ‌னி‌ல் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியது ஒரு ‌சில வேலைக‌ள்தா‌ன். அதாவது, அழு‌க்கான து‌ணிகளை துவை‌க்க‌ப் போட வே‌ண்டு‌ம். அதை ‌விட மு‌க்‌கிய‌ம், துவை‌த்த து‌ணிகளை உடனடியாக மடி‌த்து வை‌க்க வே‌ண்டிய இட‌த்‌தி‌ல் வை‌க்க வே‌ண்டு‌ம். அழு‌க்கான பா‌த்‌திர‌ங்களை துல‌க்க‌ப் போ‌ட்டு துல‌க்‌கி வை‌க்க வே‌ண்டு‌ம். துல‌க்‌கிய‌ப் பா‌த்‌திர‌ங்களை துடை‌த்து அத‌ற்கான அலமா‌ரிக‌ளி‌ல் அடு‌க்க வே‌ண்டு‌ம். ‌வீ‌‌ட்டி‌லிரு‌க்கு‌ம் தேவைய‌ற்ற‌ப் பொரு‌ட்களை தூ‌க்‌‌கி எ‌றிய வே‌ண்டு‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌த் தேவையான அடி‌ப்படையான பொரு‌ட்களை அதாவது ஜ‌க்கு, கா‌ல் துடை‌ப்பா‌ன் போ‌ன்றவ‌ற்றை வா‌ங்‌கி‌ப் போட வே‌ண்டு‌ம். எ‌டு‌த்த‌ப் பொரு‌ட்களை எடு‌‌த்த இட‌த்‌தி‌ல் வை‌த்தாலே ‌வீடு சு‌த்தமாக இரு‌க்கு‌ம். தேடி அலையு‌ம் நேர‌ம் ‌மி‌ச்சமாகு‌ம்.</description><pubDate>Fri, 05 Feb 2010 10:35:44 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/05/1100205070_1.htm</guid></item><item about="handheld"><title>கே‌ஸ் ‌ஸ்ட‌வ் பளப‌ள‌க்க</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/05/1100205068_1.htm</link><description>‌வீ‌ட்டி‌ன் சமையலறை‌யி‌ல் கே‌ஸ் ‌ஸ்ட‌வ் தா‌ன் அ‌திக‌ம் அழு‌க்காக‌க் கூடியது. ஆனா‌ல், அதனை ச‌ரியாக பராம‌ரி‌த்தா‌ல் எ‌ப்போது‌ம் பு‌திது போ‌ல் வை‌க்கலா‌ம். ‌கே‌ஸ் ‌ஸ்ட‌வ்வை த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கழு‌வினா‌ல் ப‌ர்ன‌ர்க‌ள் பொறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் இரு‌ம்பு‌த் து‌ண்டுக‌ள் துரு‌ப்‌பிடி‌த்து ‌விடு‌ம். எனவே, ‌ஸ்ட‌வ் ‌மீது ஒரு முறை சோ‌ப்பு‌க் கரைசலா‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு‌வி‌ட்டு ம‌ற்ற வேலைகளை‌க் கவ‌னியு‌ங்க‌ள். ‌பிறகு லேசாக அழு‌த்‌தி ஒரு முறை தே‌ய்‌த்து‌வி‌ட்டு ஈர‌த் து‌ணியா‌ல் சோ‌ப்பு‌க் கரைசலை‌த் துடையு‌ங்க‌ள். ‌பிறகு ‌ஸ்ட‌வ்‌வி‌ல் ஒ‌ட்டி‌யி‌ரு‌க்கு‌ம் அழு‌க்குக‌ளை ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு தே‌ய்‌த்து‌வி‌ட்டு உடனே து‌‌ணியா‌ல் துடை‌த்து ‌விடு‌ங்க‌ள். ‌பிறகு வேறு இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌‌ம் அழு‌க்கை தே‌ய்‌த்து ‌துடையு‌ங்க‌ள். தே‌ய்‌த்தது‌ம் துடை‌க்க‌ச் சொ‌ல்வது எத‌ற்காக எ‌னி‌ல், அழு‌க்‌கி‌ல்லாத இ‌ட‌த்‌தி‌ல் ‌நீ‌ங்க‌ள் தேவை‌யி‌ல்லாம‌ல் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம். மேலு‌ம் இ‌வ்வாறு செ‌ய்யு‌ம் போது ‌ஸ்ட‌வ் அ‌திக நேர‌ம் ஈர‌த்‌தி‌ல் ஊற வே‌ண்டிய அவ‌சியமு‌ம் இரு‌க்காது.</description><pubDate>Fri, 05 Feb 2010 10:34:36 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/05/1100205068_1.htm</guid></item><item about="handheld"><title>நொறு‌க்கு‌த் ‌தீ‌னியை குறை‌த்து‌‌விடு‌ங்க‌ள்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/05/1100205058_1.htm</link><description>குழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தான உணவு‌ப் பழ‌க்க வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்துவது எ‌ப்படி ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறதோ அதுபோலவே ‌தீய உணவு‌ப் பழ‌க்க வழ‌க்‌க‌த்தையு‌ம் குறை‌ப்பது தேவையா‌கிறது. குழ‌ந்தைக‌ள் உணவை ‌விட நொறு‌க்கு‌த் ‌தீ‌னிகளை‌த்தா‌ன் அ‌திகமாக ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ரி சா‌ப்பாடுதா‌ன் சா‌ப்‌பிட ‌வி‌ல்லையே.. இதையாவது சா‌ப்‌பி‌ட்டு‌ப் போக‌ட்டு‌ம் எ‌ன்று ‌‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் அதனா‌ல் பா‌தி‌க்க‌ப்பட‌ப் போவது உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் நல‌ம்தா‌ன். பொதுவாக நொறு‌க்கு‌த் ‌தீ‌னிக‌ள் உட‌ல் நலனு‌க்கு உபயோக‌ப்படாம‌ல், உட‌ல் எடையை‌க் கூ‌ட்டவே உதவு‌கிறது. அ‌திலு‌ம், அவ‌ர்க‌ள் நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிட பழ‌கி‌க் கொ‌ண்டா‌ல் அவ‌ர்களு‌‌க்கு உணவு ‌மீதான ஆ‌ர்வ‌ம் குறை‌ந்து‌விடு‌ம். எனவே ஆர‌ம்ப‌த்‌திலேயே நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவதை குறை‌‌த்து‌விடு‌ங்க‌ள்.</description><pubDate>Fri, 05 Feb 2010 09:32:58 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/05/1100205058_1.htm</guid></item><item about="handheld"><title>எ‌ந்த ‌நிற ஆடையை அ‌ணிவது</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/05/1100205057_1.htm</link><description>பொதுவாக பலரு‌ம் எ‌ந்த ‌நிற ஆடையை வே‌ண்டுமானாலு‌ம் யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் அ‌ணி‌ந்து கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ‌நினை‌க்‌கிறா‌ர்க‌ள். அது ‌மிகவு‌ம் தவறு. த‌ங்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற, அழகான பொ‌லிவை‌த் தர‌க் கூடிய ஆடைகளை‌த் தே‌ர்வு செ‌ய்து அ‌ணிய வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். மாநிறம், வெளிர் சிகப்பு, நல்ல சிகப்பான தோற்றம் கொண்டவர்கள், அட‌ர்‌த்‌தியான ‌நிற‌ப் புடவைகளையோ, சுடிதார், ‌ஸ்கா‌ட் போன்ற ஆடைகளையோ அணிந்தால் தோற்றப்பொலிவு அதிகரித்து மிளிர்வர். சற்றே நிறம் கம்மியாக இருப்பவர்கள் அல்லது கருப்பாக இருப்பவர்களானால், பெரும்பாலும் லேசான வண்ணங்களிலான (லைட் கலர்) ஆடைகளைத் தேர்வு செய்தால் அவர்களின் தோற்றம் எடுப்பாகி தனி அழகு பிறக்கும். கூடிய வரை கருப்பாக இருப்பவர்கள் வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் ரோஸ், வைலட் போன்ற அதிகம் கலர் காம்பினேஷன் இல்லாத வண்ணங்களிலான ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்தால் அவர்களின் அழகு மேலும் அதிகரித்து மின்னுவார்கள்.</description><pubDate>Fri, 05 Feb 2010 09:31:37 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/05/1100205057_1.htm</guid></item><item about="handheld"><title>‌வீ‌ட்டை‌ப் பராம‌ரி‌ப்போ‌ம்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/03/1100203064_1.htm</link><description>பூசணிக்காய் சாற்றில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும். தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும். தொந்தரவில்லாமல் துடைக்கலாம். அ‌திக அழு‌‌க்கான போ‌ர்வைகளை சூடு‌நீ‌ரி‌ல் ஊறவை‌த்து ‌பி‌ன்ன‌ர் துவை‌த்தா‌ல் எ‌ளிதாக அழு‌க்குக‌ள் போ‌ய்‌விடு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ல்லு‌ம் போது கடை‌யி‌ல் வா‌ங்கு‌ம் வா‌ட்ட‌ர் கே‌ன்களை ‌வீ‌ட்டி‌ற்கு எடு‌த்து வ‌ந்து ‌மீ‌ண்டு‌ம் த‌ண்‌ணீ‌ர் ‌பி‌டி‌த்து வை‌க்க‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம். காரு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌பிளா‌ஸ்டி‌‌க் பா‌ட்டி‌ல் த‌ண்‌ணீரா‌ல் ஆப‌த்து ஏ‌ற்படு‌ம். எனவே ந‌ல்ல‌த் தரமான கே‌ன்களை வா‌ங்‌கி‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.</description><pubDate>Wed, 03 Feb 2010 10:47:36 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/03/1100203064_1.htm</guid></item><item about="handheld"><title>ஒ‌ன்றாக சா‌ப்‌பிடுவது‌ம் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/03/1100203063_1.htm</link><description>குழ‌ந்தை‌க்கு குடு‌ம்ப‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்னவெ‌ன்பது‌ம், அத‌ன் மு‌க்‌கிய‌‌த்துவமு‌ம் தெ‌ரிய வே‌ண்டு‌ம். குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள அனைவரது மு‌க்‌கிய‌த்துவ‌த்தையு‌ம் உணர வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ள் ‌மீதான ம‌தி‌ப்பு வளர வே‌ண்டு‌ம். இத‌ற்கு குடு‌ம்ப ந‌ப்‌ர்க‌ள் அனைவரு‌ம் ஒ‌ன்று கூட அம‌ர்‌ந்து உ‌ண்பது ந‌ல்லது. இது ஒரு ந‌ல்ல தா‌க்க‌த்தை குழ‌ந்தை‌யி‌ன் மன‌தி‌ல் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். பெ‌ரியோ‌ரிட‌ம் ம‌ரியாதை, அ‌ன்பு, சா‌ப்‌பிடு‌ம் பழ‌க்க வழ‌க்க‌ம், நாக‌ரீக‌ம் போ‌ன்றவ‌ற்றை எ‌ளிதாக‌க் க‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம். ஒருவ‌ர் வரா‌வி‌ட்டா‌ல் அவரு‌க்காக கா‌த்‌திரு‌ப்பது, ஒருவ‌ர் ச‌ரியாக சா‌ப்‌பிடாத போது அது கு‌றி‌த்து கவல‌ை‌ப்படுவது போ‌ன்றவை குழ‌ந்தை‌க்கு ஒ‌வ்வொருவரு‌ம் குடு‌ம்ப‌த்‌தி‌ன் அ‌ங்க‌ங்க‌ள் எ‌ன்பதை எ‌ளிதாக பு‌ரிய வை‌க்கு‌ம்.</description><pubDate>Wed, 03 Feb 2010 10:41:46 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/03/1100203063_1.htm</guid></item><item about="handheld"><title>அழ‌குக்கான கு‌றி‌ப்புக‌ள்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/03/1100203062_1.htm</link><description>ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு தே‌‌க்கர‌ண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும். தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். சரும வறட்சியில் இருந்து விடுபட குளித்த உடனேயும், ஒவ்வொரு முறை முகம் கசுவும்போதும் பாடி லோஷன் அல்லது மாய்சரைசர் உபயோகிக்க வேண்டும்.</description><pubDate>Wed, 03 Feb 2010 10:40:56 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/03/1100203062_1.htm</guid></item><item about="handheld"><title>குழ‌ந்தைக‌ளி‌ன் தடைபடு‌ம் ‌விளையா‌ட்டு</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/02/1100202060_1.htm</link><description>அ‌ந்த கால‌த்‌தி‌ல் ஓடி ‌விளையாடு பா‌ப்பா எ‌ன்று பார‌தி பாடினா‌‌ர். ஆனா‌ல் நா‌ம் இ‌ப்போது குழ‌ந்தைக‌ள் நட‌ந்தாலே பா‌ர்‌த்து நட எ‌ன்று பய‌ப்பட வே‌ண்டி உ‌ள்ளது. ஆனா‌ல் அத‌ற்காக குழ‌ந்தைகளை ‌விளையாடாம‌ல் ‌வி‌ட்டு வை‌க்க‌க் கூடாது. அவ‌ர்களு‌‌க்கு எ‌ங்கு முடியுமோ அ‌ங்கு பாதுகா‌ப்பான ‌விளையா‌ட்டை ‌விளையாட அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம். மேலு‌ம் ப‌க்க‌த்து ‌வீ‌ட்டு குழ‌ந்தைகளுட‌ன் ‌விளையாட அனும‌தி‌க்க வே‌ண்டியது‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌‌கிய‌ம். எ‌ப்போது‌ம் அம‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌செய‌ல்‌திற‌ன் ‌விரை‌வி‌லேயே குறை‌ந்து‌விட‌க் கூடு‌ம். மேலு‌ம், குழ‌ந்தைக‌‌ளு‌‌க்கு ‌சி‌ன்ன ‌சி‌ன்ன உட‌ற்ப‌யி‌‌ற்‌சிக‌ள் செ‌ய்ய வை‌ப்பது, மாடி‌யி‌ல் கா‌ற்றாட நட‌க்க வை‌ப்பது‌ம் ந‌ல்லது. உ‌ற்சாக‌த்தை அ‌ளி‌ப்பத‌ற்கு குழ‌ந்தைகளு‌க்கு ‌விளையா‌ட்டி‌ற்கு ஈடான ஒ‌ரு ‌விஷய‌ம் இ‌ல்லை.</description><pubDate>Tue, 02 Feb 2010 10:18:50 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/02/1100202060_1.htm</guid><media:group><media:content url="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/02/1100202060_1.htm" height="48" width="48" medium="image" /><media:title type="plain">குழ‌ந்தைக‌ளி‌ன் தடைபடு‌ம் ‌விளையா‌ட்டு</media:title><media:thumbnail url="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/02/images/tn_1100202060.jpg" /><media:description></media:description><media:credit></media:credit></media:group></item><item about="handheld"><title>‌சில எ‌ளிய அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/02/1100202059_1.htm</link><description>தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். இளம் சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.</description><pubDate>Tue, 02 Feb 2010 10:06:30 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/02/1100202059_1.htm</guid></item><item about="handheld"><title>வீட்டில் உள்ளவர்களுக்கான குறிப்பு</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/02/1100202058_1.htm</link><description>ஊதுவ‌த்‌திகளை வா‌ங்‌கி வ‌ந்தது‌ம், அதனை நீரில் நனைத்து பின்பு காற்றில் உலரவிட்டு எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அவ‌ற்றை பூஜை‌யி‌ன் போது ஏற்றினால், அதிக மணமாகவும் இருக்கும் நன்றாகவும் எரியும். பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச் சேலையும் பளிச்சிடும். வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும். மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறைபோக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறை போய்விடும். மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.</description><pubDate>Tue, 02 Feb 2010 10:03:41 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/02/1100202058_1.htm</guid></item><item about="handheld"><title>சு‌த்த‌ம் செ‌ய்வத‌ற்கான ப‌ட்டிய‌ல்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/">‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/01/1100201042_1.htm</link><description>‌வீ‌ட்டை எ‌ப்போது சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ஒரு ப‌ட்டிய‌ல் போ‌ட்டுக் கொ‌ள்ளு‌ங்க‌ள். வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் அதாவது ‌புத‌ன் ‌கிழமை படு‌க்கை அறையை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌வியாழ‌‌க் ‌கிழமை கு‌ளியலறை, க‌ழிவறைகளை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் அது ச‌னி அ‌ல்லது ஞா‌யிறாக இரு‌ந்தாலு‌ம் சமையலறையை முழுமையாக சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஒரு நாளை அத‌ற்காக ஒது‌க்‌கி ‌விடு‌ங்க‌ள். ஒரு நாளை‌க்கு ஒரு அறை ம‌ட்டுமே சு‌த்த‌ப்படு‌த்த வ‌ே‌ண்டு‌ம். அதுவு‌ம் முழுமையாக. ஒ‌வ்வொரு வாரமு‌ம் சமையலறை பு‌திதுபோ‌ல் சு‌த்த‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ல் அ‌தி‌ல் சமை‌க்கு‌ம் உணவு‌ம் ஆரோ‌க்‌‌கியமாக இரு‌‌க்கு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் போ‌ர்வைக‌ள், தலையணை உறைகளை வார‌த்‌தி‌ற்கு ஒரு முறையாவது ‌நி‌ச்சயமாக துவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் சருமய ‌வியா‌திகளை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.</description><pubDate>Mon, 01 Feb 2010 09:04:11 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/hometips/1002/01/1100201042_1.htm</guid></item><item about="handheld"><title>டி‌வி பா‌ர்‌ப்பதை குறை‌க்கலா‌ம்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/">குழந்தை வளர்ப்பு</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/01/1100201041_1.htm</link><description>குழ‌ந்தைகளை அ‌திகமாக ‌டி‌வி பா‌ர்‌ப்பதை‌க் குறை‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. ஆனா‌ல் அத‌ற்காக டி‌வியே பா‌ர்‌க்க‌க் கூடாது எ‌ன்று தடை போடுவது ‌மிகவு‌ம் தவறு. கு‌றி‌ப்பாக தொட‌ர் கதைக‌ள், வ‌ன்முறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ‌நிறை‌ந்த ‌சி‌னிமா, டி‌வி தொட‌ர்களை பா‌ர்‌ப்ப‌தினாலேயே குழ‌ந்தைகளு‌ம் அ‌திக கோப‌ம், வேக‌ம் ‌நிறை‌ந்தவ‌ர்களாக வள‌ர்‌‌கி‌ன்றன‌ர். இத‌ற்காக பெ‌ற்றோ‌ர் ‌தியாக‌ம் செ‌ய்ய வே‌ண்டியது‌ம் மு‌க்‌கிய‌ம். பெ‌ற்றோரு‌ம், ஆபாச ‌சி‌னிமா, வ‌ன்முறை ‌சி‌னிமா, டி‌வி ‌சீ‌ரிய‌ல்க‌ள் போ‌ன்றவ‌ற்றை பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். பொது அ‌றிவு ‌விஷய‌ங்க‌ள், ‌விளையா‌ட்டு, டி‌ஸ்கவ‌ரி சேன‌ல், குழ‌ந்தைக‌ள் ப‌ங்கு பெறு‌‌ம் போ‌ட்டி ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் இவ‌ற்றை கா‌ண்பதை வழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ந‌ல்ல நா‌ட்க‌ளி‌ல் அதாவது ப‌ண்டிகை ‌தின‌ங்க‌ளி‌ல் குழ‌ந்தைக‌‌ள் டி‌வி‌யி‌ன் மு‌ன் அம‌ர்‌ந்து பொழுதை‌க் க‌ழி‌ப்பதை த‌வி‌ர்‌த்து ந‌ல்ல ‌விஷய‌ங்க‌ளி‌ல் ஈடுபடு‌த்துவது ந‌ல்லது.</description><pubDate>Mon, 01 Feb 2010 09:04:03 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/parenting/1002/01/1100201041_1.htm</guid></item><item about="handheld"><title>எ‌ளிய வ‌ழிக‌ளி‌ல் அழ‌கிய முக‌ம்</title><category domain="http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/">நலமும் அழகும்</category><link>http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/01/1100201040_1.htm</link><description>இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.</description><pubDate>Mon, 01 Feb 2010 09:03:54 GMT</pubDate><source url="http://www.webdunia.com" media="handheld" /><guid isPermaLink="true">http://tamil.webdunia.com/miscellaneous/woman/healthbeauty/1002/01/1100201040_1.htm</guid></item></channel></rss>