கென்யாவில் போலீஸ் நிலையத்தில் கார்குண்டு வெடிப்பு; 4 பேர் பலி
கென்யா தலைநகர் நைரோபியில் போலீஸ்நிலையத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச்செய்தனர்.
இந்த தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2011 ம் ஆண்டு கென்யா படைகள் தெற்கு சோமாலியாவை ஆக்கிரமிப்பு செய்தது.
அதில் இருந்து சோமாலியா தீவிரவாதிகள் கென்யாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.