வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (13:23 IST)

துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் சாலையில் சென்ற பெண்: பதறவைக்கும் வீடியோ

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பர்தா அணிந்து சென்ற பெண்ணை போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.


 

அந்த பையில் ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த பெண் நான் ஒரு தீவிரவாதி என்றும், என்னை விடவில்லை என்றால் உடலில் கட்டியுள்ள வெடிகுண்டை வெடிக்க செய்வேன் என்றும் மிரட்டினார். இதனால் பீதியடைந்த போலீஸார் தெறித்து ஓடினர். பின்னர் அங்கிருந்து அந்த பெண் குழந்தையின் தலையை கையில் பிடித்தபடி சென்றார். இந்நிலையில் மறைந்து நின்ற போலீஸர் அந்த பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், அந்த பெண் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வேலை செய்து வந்தார். பின்னர் பெற்றோர்கள் வெளியே சென்றபோது குழந்தையின் தலையை வெட்டி எடுத்துவந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சிகளை சாலையில் செல்லும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.