வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (18:02 IST)

கணவனின் இறுதிச் சடங்கின்போது கவர்ச்சி நடனம் ஆடிய மனைவி

இறந்த கணவரின் இறுதிச் சடங்கின்போது மனைவி ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
 
கடந்த் 10 ந்தேதி தைவானை சேர்ந்தவர் ஜியான் எனபவர் மரணமடைந்தார். இதனால் அவரது இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்த எண்ணிய அவரது மனைவி திருமதி ஜியான், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடனம் ஆடும் பாரம்பரியம் தவானை சேர்ந்த மாபியா கும்பலிடம் ஒப்படைத்தார்.
 

 
இறுதிச் சடங்கின்போது மாஃபியா கும்பல் நடனம் ஆடும் பழக்கம் 1980 ஆம் ஆண்டில் இருந்தே நடைபெற்று வருகிறது. இறந்தவரின் ஆவி இத்தகைய நடனங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக அங்குள்ளவர்கள் எண்ணி, கவர்ச்சி நடனங்களுடன் கூடிய இறுதி சடங்கு ஊர்வலங்களை அங்கு நடத்துகிறார்கள்.
 

 
இந்நிலையில், ஜியானின் இறுதி சடங்கில் இதில் 2 பெண்கள் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர். அதில் ஜியானின் மனைவியும் சிறிய உள்ளாடைகளுடன் ஆடியதைப் பார்த்த நண்பர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 
ஆனால், இது குறித்து கூறிய ஜியானின் மனைவி, “எனக்கு எனது கணவரின் இறுதி சடங்கு பயணம் பாராட்டப்பட வேண்டும். மேலும் அவருக்கு நான் கொடுக்கும் கடைசி பரிசாக இது அமையும்” என தெரிவித்துள்ளார்.