வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (18:46 IST)

அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது; பாகிஸ்தான் முன்னாள் அதிபர் குற்றச்சாட்டு

பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார்.

 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டு சேர்ந்துள்ளது. 
 
ஆப்கானிஸ்தானில் இந்தியாவில் பங்கு என்ன என்பதை ஐக்கிய நாடுகளின் சபையில் விவாதிக்க இருக்கிறோம். எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பின்னர் மீண்டும் எதற்காக அமெரிக்கா தேடி வருகிறது என்பதற்கான காரணம் பாகிஸ்தான் மக்களுக்கு விளங்கவில்லை. 
 
தேவைப்படும் போது எங்களை பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுவதையும் பாகிஸ்தானியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.