வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:45 IST)

ஜான் எப் கென்னடி படுகொலை வழக்கை தோண்டும் டிரம்ப்: 3000 ரகசிய ஆவணங்களை வெளியிட ஒப்புதல்!!

அமெரிக்க மக்களை மட்டுல்லாமல் உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. 


 
 
கடந்த 1963 நவம்பர் 22 ஆம் தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்கு தனது மனைவியுடன் காரில் ஊர்வலமாக சென்றபோது ஜான் எப் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டார்.  
 
மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட போதிலும் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார். கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு என்ற இளைஞன் இந்த கொலை சம்பவமாக கைது செய்யப்பட்டான். 
 
ஆனால், அவனையும் ஜாக் ரூபி என்பவன் சுட்டதால், ஆஸ்வால்டும் உயிரிழந்தான். இதனால், கென்னடியை அவன் எதற்காக அவன் சுட்டு கொன்றான், அதன் பின்னணி என்ன என்பது தெரியாமல் போய்விட்டது. 
 
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பாக உள்ள 3,000 ரகசிய ஆவணங்களை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்து உள்ளார்.  
 
ஆனால் அந்த ரகசிய ஆவணங்களில் இராணுவ மற்றும் உளவுத்துறை சம்பந்தமான முக்கிய நடவடிக்கைகளுக்கு உரிய சில ஆவணங்கள் பாதுகாக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.