வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (13:12 IST)

டிரம்பின் சர்வாதிகார போக்கு: சுதந்திர தேவின் கண்களில் கண்ணீர்!!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன், அமெரிக்காவிற்குள் அடுத்த 120 நாட்களுக்கு அகதிகள் வருவது நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 
 
சிரியா, சூடான், லிபியா, ஏமன், சோமாலியா நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த 120 நாட்களுக்கு பின்னர், ட்ரம்ப் அரசின் ஆட்சிக்குழு முடிவு செய்யும் நாடுகளிலிருந்து மட்டுமே அகதிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
மேலும், அகதிகளுக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் மட்டுமே என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அகதிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், டிரம்பின் சர்வாதிகார போக்கால், அமெரிக்கா-ஆஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.