இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: ஜெர்மனியில் சோகம்
ஜெர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானவர்கள் உயிரிந்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாகாணத்தில் உள்ள பாட் அய்பிலிங் நகரில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு ரயில் தடம்புரண்டது. இதனால், ரயிலின் பல பெட்டிகள் கவிழ்ந்துவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்து நடந்த பகுதியில், ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது.
இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.