1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (11:15 IST)

இரவு நேரங்களில் இந்திய எல்லைப் பகுதியின் எழில்மிகு தோற்றம்:விண்வெளி புகைப்படம்

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்தோ பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் எழில் மிகு காட்சிகளை நாசா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


 
 
விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் நாசா முதன்மையானது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாசா விண்வெளியில் தனது ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவியுள்ளது.
 
அங்கு தங்கியிருக்கும் நாசா விஞ்ஞானிகள் பூமியில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பர். இந்நிலையில் கடந்த செப்டமர் 23 ஆம் தேதி விண்வெளியில் இருந்த நாசா விஞ்ஞானி ஒருவர்,  தனது நிகான் டி 4 கேமராவில் இந்தக் காட்சிகளை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளார்.
 
இந்தப் புகைப்படங்களுக்கு இதுவரை 50 ஆயிரம் லைக்குகள் விழுந்துள்ளன. 9 ஆயிரம் முறை பரிமாற்றப்பட்டுள்ளது.