1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:33 IST)

13, 15 வயசு பசங்களுடன் வகுப்பறையில் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை!

13, 15 வயசு பசங்களுடன் வகுப்பறையில் உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை!

அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் 13, 15 வயது மாணவர்களை குறிவைத்து சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுடன் பல இடங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.


 
 
அமெலியா டேட் என்ற 27 வயதான பெண் வர்ஜீனியா, லிய்நிசிபூர்க் பகுதியை சேர்ந்தவர் இவர் பள்ளி ஒன்றில் அறிவியல் ஆசிரியயையாக பணியாற்றி வந்தார். இவர் 13, 15 வயது மாணவர்களை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை வசப்படுத்தியுள்ளார்.
 
மாணவர்களிடம் ஆபாசமாக ஆசைவார்த்தைகளை கூறி அவர்களுடன் வகுப்பறை, அடுக்குமாடி குடியிருப்பு என பல இடங்களில் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆசிரியை மெலியா டேட். இந்நிலையில் மாணவன் ஒருவனின் செல்போனுக்கு இந்த ஆசிரியை அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து அந்த மாணவனின் பெற்றோர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து ஆசிரியை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் ஆசிரியை தான் செய்த அனைத்து தவறுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து வரும் மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் போது ஆசிரியைக்கு பெரும்தொகை ஒன்று அபராதமாகவும் மேலும் 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.