வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (13:40 IST)

அடுத்ததாக அரசியல்வாதிகளின் குழந்தைகளை கொல்வோம்: பாகிஸ்தானுக்கு தாலிபான் மிரட்டல்

பெஷாவர் பள்ளித் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் அரசியல் வாதிகளின் குழந்தைகளைக் கொல்ல உள்ளதாக தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தலிபான்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
 
தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் கமாண்டர் முகம்மது ஹராசனி பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதத்தில், " கைது செய்து  வைத்துள்ள எங்கள் அமைப்பினருக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களின் குழந்தைகளைக் கொல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த மிரட்டலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.