வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (13:11 IST)

தைவானில் வெடி விபத்து: 24 பேர் பலி, 270 பேர் படுகாயம்

தைவானில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்தில் 24 பேர் பலியாயினர், 270 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

தைவானின் தென்பகுதியில் உள்ள கவ்ஷியுங் நகரில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் பலியாயினர், 270 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தின் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே தூக்கியெறியப்பட்டன. சாலைகளில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எரிவாயுக் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.