வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (09:02 IST)

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரம் – நாளை அனைத்துக் கட்சி கூட்டம் !

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேன அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாளை நடத்த இருக்கிறார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால்  இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதல் குறித்த உளவுத்துறை அளித்த தகவல்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இதனால் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை முழுவதுமாக சீரமைக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருக்கிறார் இலங்கை அதிபர். அதையடுத்து நாளை மாலை  4 மணிக்கு சர்வசமயக் கூட்டமும் நடக்க இருக்கிறது.