1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (15:37 IST)

இலங்கை அரசு சர்வதேச நாடுகனிள் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை அரசு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 28 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடபெற்று வருகினறது.
 
இதன் தொடக்க விழாவில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார்.
 
இது குறித்து மங்கள சமரவீர பேசுகையில், "இலங்கை அரசு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படவே விரும்புகிறது.
 
இதற்கு உரிய அணுகுமுறை, பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்புக்கள், புரிந்துணர்வு மற்றும் கற்றல் மூலமாக அமையுமே தவிர முரண்பாடாக அமையாது." என்று கூறியுள்ளார்.