வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (16:14 IST)

ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகள்: மனித மூளை

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகள் கொண்டிருப்பான். மனித மூளை சிந்தனையிலும், சிந்திப்பதிலும் இன்றுவரை ஆச்சரியமூட்டி வருகிறது.


 

 
ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கும் திறன் மற்றும் செயல்பாடுகள் மூலம் தான் வேறுபடுகிறார்கள். அனைவரும் ஒரே மாதிரியான மூளை இருப்பதால் மனோதத்துவ ரீதியாக சில உண்மைகள் அனைவருக்கும் பொருந்தும்.
 
அதில் சில உண்மைகளை பற்றி நாம் காண்போம்:-
 
மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.
 
சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.
 
குளிக்கும்போது பாட்டு பாடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்.
 
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகள் கொண்டிருப்பான்.