வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (19:35 IST)

7 ஆண்டுகளாக தாயையே பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரன்

மத்திய அமெரிக்காவில் நாடான ஹோன்டுராஸ் குடியரசில் பெற்ற தாயை 7 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமக் கொட்டூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோன்டுராஸ் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் பேபியன் ஆல்வராடோ(38). கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இவன் ஒருநாள் முழு போதையில் இருந்தபோது தன்னைப் பெற்ற தாய் என்றும் பாராமல் தற்போது சுமார் 60 வயதாகும் அந்தப் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
 
பின்னர், கடந்த 7 ஆண்டுகளாக போதை தலைக்கேறும் வேளைகளில் எல்லாம் இதையே வாடிக்கையாக்கிக் கொண்டான். குடும்ப கவுரவம் கருதி இதை மூடி மறைத்துவந்த அந்தத் தாய், நேற்றிரவு இவனது அத்துமீறல் எல்லை கடந்து போனதால் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து, அந்த காம வெறியனை கைது செய்து அவனை சிறையில் அடைத்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் ஹோன்டுராஸ் குடியரசில் நடைபெற்ற இரண்டாவது ஒழுக்கக்கேடான சம்பவம் இது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதேபோல் பெற்ற அன்னை என்றும் பாராமல் 51 பெண்ணை கற்பழித்த 21 வயது காமுகனை காவல்துறையினர் கைது செய்திருந்ததாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.