வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (19:42 IST)

உலகின் மிகப் பெரிய கோபுரத்தின் மீது நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படக் கலைஞர்

உலகின் மிகப்பெரியக் கோபுரமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது நின்று புகைப்படக் கலைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துள்ளார்.
 

 
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஜெரால்ட் டொனோவன். இவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா (2,722 அடி) என்னும் கட்டிடத்தின் மீது நின்று செல்ஃபி எடுத்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “நான் வழக்கமாக செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஒரு நபரல்ல. எப்பொழுதும் சிறந்த முதல் நபராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எப்படியாகியாலும் இது மிகச் சிறந்த சந்தர்ப்பமாக இது இருந்தது” என்றார்.