1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (17:42 IST)

ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை

உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தன.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், இத்தாலியப் பிரதமர் மேட்டியோ ரென்ஸி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் ஆகியோர் காணொலி முறையில் நிகழ்த்திய சந்திப்பின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
 
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நிகழ்த்திய காணொலிச் சந்திப்பின்போது, கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிரான கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததின்படி, உக்ரைன் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வதாக தலைவர்கள் உறுதியளித்தனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.