வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:01 IST)

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் - பாக் தளபதி ரஹீல் ஷெரிப்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
எல்லைப் பகுதியில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாமல் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இதனால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று ஷெரிப் இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும், இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.