வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (13:24 IST)

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்கு குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுள்ள பெண்

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்கு குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுள்ளார். 
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரியானா பேகம் இஸ்லாம் (33) என்ற பெண் தன்னுடைய 8 வயதான மகன் மற்றும் 3 வயது மகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லை நோக்கி கடந்த மாதம் 14 ஆம் தேதி பயணித்துள்ளார்.
 

 
அவருக்கி சிரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உதவி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த பயணம் குறித்த தகவல்களை அந்த பெண் தனது கணவருக்கு தெரியாமலேயே வீட்டைவிட்டு சென்றுள்ளார். அவருடைய பாஸ்போர்ட் குறித்த தகவல்கள் அவருடைய லேப்டாப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து அவருடைய கணவர் கூறுகையில், “ஏன் அவர் அங்கு குழந்தைகளுடன் சென்றார், ஏன் எல்லாவற்றையும் துறந்து சென்றார் என எனக்கு எதுவும் தெரியவில்லை. நிச்சயம் அவள் திரும்பி வருவாள் என்ற நம்மிக்கை எனக்கிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்களைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணையச் சென்றவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.