வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (18:05 IST)

எலிக்கு இத்தனை கோடியா: பாரீஸ் அரசாங்கம் பயங்கரம்!!

எலிகளை கொல்வதற்காக பிரான்ஸ் அரசு ரூ.150 கோடி ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உலகின் முக்கிய நகரமான பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால், அதனை ஒழிக்க பிரான்ஸ் அரசு அதன் மாநகராட்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.
 
பாரீஸ் நகரின் வீதிகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள். சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளி காலியிடங்கள் என் எங்கு பார்த்தாலும் எலிகள் பெரும் தொல்லையாய் காணப்படுகிறது. 
 
எனவே பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ அதிலாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.