வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (16:16 IST)

காதல் திருமணம் செய்த மகளை தீ வைத்து எரித்து கொன்ற தாய்

பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்த ஒரு பெண் காதல் திருமணம் செய்ததால் அவரது தாய் அந்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானில் லாகூரை சேர்ந்தவர் பர்வீன். இவரது மகள் ஜீனத் அந்த பகுதியில் உள்ள ஹசன் என்பவரை காதலித்து வந்தார். வழக்கம் போல இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் ஓடிச்சென்று காதல் திருமணம் செய்துகொண்டனர்.
 
இந்நிலையில் ஜீனத் தனது தாயை நேற்று சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தாய் பர்வீனும் தனது மகள் ஜீனத்தை மன்னித்து விட்டது போல் கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
 
வீட்டிற்கு சென்ற ஜீனத்தை அவரது தாய் நன்றாக திட்டியுள்ளார். தனது மகனுடன் சேர்ந்து ஜீனத்தின் உடலில் பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார் பர்வீன். இதனால் ஜீனத் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
 
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஜீனத்தின் தாயை கைது செய்தனர். அவரது மகன் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தாய், மகன் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.