1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (13:55 IST)

மூளையே இல்லாத கேப்டனால் பாகிஸ்தான் அணி தோற்றது - முன்னாள் வீரர் காட்டம்!

உலகக்கோப்பை கிரிகெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆணிகள் மோதின. இதில் இந்திய அணு அபாரமாக வெற்று பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்  வேகப் பந்து வீச்சாளர் சோகைப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனை வசமாக விமர்சித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் பிட்னஸ் இல்லாத ஒரே கேப்டன் சர்பிரஸ் அகமதுதான் என்று ஏற்கனவே அக்தர் விமர்சித்திருந்த நிலையில்
 
தற்போது அவர் கூறியுள்ளதாவது :
 
இந்தப் போட்டியில் டாஸ் வென்றது முக்கியமானது. ஆனால் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்யாமல், பந்துவீச்சை தேர்வு செய்ததுதான் மூளையில்லாத கேப்டன்சியைக் காட்டியது. 
 
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ரன்கள் எடுத்திருந்தாலே அது இந்திய அணு சேஸிங் செய்யும் போது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அப்படி செய்திருந்தால் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும்! என்று தெரிவித்திருக்கிறார்.