1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (17:38 IST)

பள்ளி மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியானார்கள். இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 132 பேர் பள்ளி குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.