வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:59 IST)

அந்தமானில் நிலநடுக்கம்: சுனாமி வருமா???

அந்தமான் தீவுகளில் காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. 

 
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது போர்ட்பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்தது.
 
இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு வந்தனர். அப்போது கடல் எப்போதும் போல் இல்லாமல் சற்று சீற்றமாக இருந்தது. 
 
ஆனாலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. சுனாமி அபாயம் இல்லை என தெரியவந்துள்ளது.