அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்காவில் மிக பிரபலமாக விளங்கும் சுதந்திரதேவி சிலைக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் லிபர்டி தீவில் பிரசித்து பெற்ற சுதந்திரதேவி சிலை உள்ளது. இச்சிலையை பார்வையிட தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வருவர். இந்நிலையில் இச்சிலைக்கு திடீரென மர்ம நபரால் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும் அந்த மர்ம நபர் சுதந்திரதேவி சிலையில் வெடிகுண்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடித்து சிதறிவிடும் என்று கூறியுள்ளார். இதனால் அங்கு பெறும் மீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. மேலும் மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிருபர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தீவிர சோதனை மேற்கொண்டதில் அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.